Monday, May 14, 2007

நிதர்சனமான உண்மை தான் !

உன்னுடன் சேர்ந்து,
உன் வலக்கரம் பிடித்து,
ஊரறிய உலா வரும்
திருநாள் கண்டேன் !

உன் தோள் சாய்ந்து,
உதடு சுடும் மௌனத்துடன்,
வெட்கம், வெளிச்சம் - இவை உதறி,
உறைபனியில் பாதம் பதித்து,
பலநூறு மைல்கள் நடைபழக...

நிதர்சனமான உண்மைதான்.... !
உன்னுடன் இருப்பது ஒரு கோடி சொர்கம்பெரும் !

-உன்னவள்

No comments: