Monday, May 14, 2007

உணர்வுச்சுவடுகள்...

சுயங்களின் சூனியத்தை
சுட்டெரிக்க விரும்பினேன் !
முடியவில்லை என்னால் !

மற்றவர்களுக்காய்...

என் இதழ் விரித்தேன் !
விலகவில்லை...
உன்னில் சிதறிய
என் நினைவுகள் மட்டும்...!

கைப்பிடி இதயத்தை
என்னை இம்சிக்காமல்,
இடம் பெயற்றாயடா ???

நான் வெற்றி பெறும்போதெல்லாம்,
நீ பிடித்த கரம் !
தோல்விகளால் துவண்டபோதெல்லாம்,
எனைச் சாய்த்துக்கொண்ட

உன் தோள் !

என் கண்ணீரை
இவ்வுலகம் எட்டிப்பார்க்க விடாத
உன் ஸ்பரிசம் !

உடைந்த போதெல்லாம்
என்னை உதிராமல் காத்த
உன் இதழ் !

வேதனிக்கிறேன் !
எனில் விழும்
சிறு கீரலயும் தாங்கீடாத
உன் மனம்....


எனை மறந்து..
என்னுயிர் கிழித்தெறிந்து...
உணர்வுகளை உரித்தெடுத்து
எனை....
உறைபனியாய் விட்டுச்செல்ல
எப்படி சம்மதித்தது,
உனக்கும் எனக்குமான
நம் உணர்வுச்சுவடுகள்...? ? ?

5 comments:

Anonymous said...

Gr8 impression of a true gal feeling...

seenu said...
This comment has been removed by a blog administrator.
Nono said...

Un kavi thiranai paarattum oru kavi ariyaa paamaran!!
Awesome!!!!

Unknown said...

Thanks for all your comments....

Bhushavali said...

Beautiful Expression...